வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்று (27) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்காக யாழ்ப்பாண மாவட்ட செயலகம் விசேட பயண ஏற்பாடுகளை அறிவித்துள்ளது.
பயண நேரங்கள் மற்றும் கட்டணம்:
- பேருந்து சேவை: இன்று அதிகாலை 4.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து குறிகட்டுவான் வரை அரச மற்றும் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடும்.
- படகுச் சேவை: குறிகட்டுவானிலிருந்து கச்சதீவுக்கான படகுகள் இன்று காலை 5.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இயக்கப்படும்.
- கட்டணம்: குறிகட்டுவானிலிருந்து கச்சதீவுக்கான ஒரு வழிப் பயணக் கட்டணமாக ரூபா 1,200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அறிவித்தல்:
இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் கச்சதீவிற்கான கடல் போக்குவரத்துச் சேவைகள் இடம்பெறமாட்டாது. எனவே, யாத்திரிகர்கள் குறித்த நேரத்திற்கு முன்னதாகத் தமது பயணத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு நாளை (28) காலை உணவு மாத்திரமே வழங்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

