இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் காப்புறுதி நிறுவனங்கள் இணைந்து, மோட்டார் வாகனங்களுக்காக டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை வழங்கும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளன. இது தொடர்பான விசேட அறிவிப்பை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.
இதற்கென ‘தேசிய காப்புறுதிச் சரிபார்ப்பு அமைப்பு’ (National Insurance Verification System) உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் பொலிஸார் பின்வரும் மூன்று முறைகள் மூலம் காப்புறுதியின் செல்லுபடியாகும் தன்மையை உறுதிப்படுத்த முடியும்:
*1338#):எந்தவொரு மொபைல் இணைப்பிலிருந்தும் *1338# என்ற எண்ணை அழைத்து, வாகன இலக்கம் அல்லது காப்புறுதிச் சான்றிதழ் இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் அதன் தற்போதைய நிலையை உடனடியாக அறியலாம்.
வாகன இலக்கம் அல்லது காப்புறுதிப் பத்திர இலக்கத்தை டைப் செய்து 1338 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் பதில் தகவலைப் பெறலாம்.
1338 என்ற குறுகிய எண்ணை அழைத்து, உரிய காப்புறுதி நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து வாடிக்கையாளர் சேவைப் பிரிவு ஊடாக விபரங்களை உறுதிப்படுத்தலாம்.
தகவல்களைப் பெற வாகன இலக்கத்தை உள்ளிடும்போது இடைவெளி (Space) விடக்கூடாது.
எதிர்காலத்தில் தற்காலிக காப்புறுதி ஆவணங்களை வழங்குவதை நிறுத்தி, முழுமையாக டிஜிட்டல் மயமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்
கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…
தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…
இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…
கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…