வெறும் மருத்துவ நிபுணர்களை மாத்திரம் உருவாக்காமல், நோயாளிகளின் வலிகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயலாற்றக்கூடிய சகானுபூதி (Empathy) மற்றும் மனிதநேயமிக்க மருத்துவர்களை உருவாக்கக்கூடிய புதியதொரு முகம் நாட்டின் மருத்துவக் கல்விக்கு அவசியமானது என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் மருத்துவக் கல்வி பற்றிக் கலந்துரையாடுவதற்கும், அதற்கான தேசியக் கொள்கையொன்றைத் தயாரிப்பதற்கும் என நியமிக்கப்பட்ட விசேட மருத்துவ நிபுணர் குழுவின் முதலாவது கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இக்கூட்டம் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் கல்வி அமைச்சில் நடைபெற்றது.
தேசிய சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மருத்துவக் கல்வியை வலுப்படுத்துவதன் மூலோபாய முக்கியத்துவத்தை இனங்கண்டு இந்த தேசியக் கொள்கை தயாரிக்கப்படவுள்ளது. இக்கூட்டத்தின் போது பின்வரும் முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது:
இந்த விசேட நிபுணர் குழுவினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்கள், இலங்கையின் எதிர்கால மருத்துவத் துறைக்கும், ஒட்டுமொத்த பொதுமக்களின் நல்வாழ்விற்கும் நேரடியாகப் பங்களிப்பு செய்யக்கூடிய மிகவும் பாரதூரமான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமையும் என பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…
தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…
இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…
கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…