Categories: உள்ளூர்

தொழிற்சாலை தீ விபத்தில் சிக்கிய ஊழியர்கள்

எம்பிலிப்பிட்டியாவில் உள்ள முன்னணி ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் இன்று (03) காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் 22 தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை தொழிற்சாலை இயங்கிக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

தீ விபத்தின் காரணமாக ஏற்பட்ட கடுமையான தீக்காயங்கள் மற்றும் விபத்தின் போது வெளியேறிய நச்சுப்புகையை சுவாசித்தமை காரணமாகவே தொழிலாளர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

விபத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 15 பேர் முதற்கட்டமாக மீட்கப்பட்ட நிலையில், தற்போது மொத்தம் 22 தொழிலாளர்கள் சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்ச பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக செவனகல தீயணைப்புத்துறையிலிருந்து அவசரமாகத் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீயை அணைக்கும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த திடீர் தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், எம்பிலிப்பிட்டிய பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

Recent Posts

கல்முனை சந்தை வீதியை அதிரவைத்த 16 வயதுச் சிறுவனின் விபத்துச் சம்பவம்

கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…

2 மணத்தியாலங்கள் ago

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம்

தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…

3 மணத்தியாலங்கள் ago

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…

3 மணத்தியாலங்கள் ago

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி: 20 இலட்சம் ரூபாய் பணத்தைச் சுருட்டிய 41 வயதுப் பெண் அதிரடிக் கைது!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…

3 மணத்தியாலங்கள் ago

பொசன் பௌர்ணமியை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…

9 மணத்தியாலங்கள் ago

தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் கோர விபத்து

கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…

9 மணத்தியாலங்கள் ago