Categories: உள்ளூர்

இன்று உலக சுற்றுச்சூழல் தினம்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கொள்கை வகுப்பாளர்களின் கவனத்தை ஈர்க்கவும் 1972 ஆம் ஆண்டு முதல் பிரகடனப்படுத்தப்பட்ட உலக சுற்றுச்சூழல் தினம் இன்று (05) அனுசரிக்கப்படுகிறது.

இம்முறை ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP), “பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகள்” என்ற மிக முக்கியமான உலகளாவிய கருப்பொருளின் கீழ் இந்நாளை நடத்தத் திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைத்தல், சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுத்தல் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கான உலகளாவிய முயற்சிகளை விரைவுபடுத்துவது இம்முறை வலியுறுத்தப்படும்.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

ஐக்கிய நாடுகள் யாப்பின்படி (UNFCCC), அடுத்த சில தசாப்தங்களில் பசுமை இல்ல வாயு உமிழ்வு கணிசமாகக் குறைக்கப்படாவிட்டால், இந்த நூற்றாண்டில் உலகளாவிய வெப்பநிலை 2.9 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும், இதனால் பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

: இலங்கையும் பருவநிலை மாற்றத்தின் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதுடன், திடீர் வெள்ளப்பெருக்கு, மண்சரிவுகள் மற்றும் நீர் பற்றாக்குறை போன்ற தீவிர வானிலை நிலமைகள் சாதாரணமானவையாக மாறியுள்ளன.

உலகளாவிய முயற்சிக்கு தீவிரமாகப் பங்களிக்கும் வகையில், “பருவநிலை மாற்றத்தின் பாதிப்பைக் குறைக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்ற உள்நாட்டுக் கருப்பொருளை முன்னிறுத்தி இலங்கை இம்முறை உலக சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடுகிறது.

இதற்கமைய, சுற்றுச்சூழல் தினத் திட்டத்தின் தேசிய விழா, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக படபெந்தி தெரிவித்தார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக இந்நாட்டில் ஏராளமான சட்டங்கள் இருந்தபோதிலும், கடந்த காலத்தில் நிலவிய அரசியல் கலாச்சாரம் காரணமாக, அச்சட்டங்களை மீறி அரசியல்வாதிகளுக்குத் தேவையானவாறு சுற்றுச்சூழல் அழிவுகள் ஏற்படுத்தப்பட்டதாக அமைச்சர் தம்மிக படபெந்தி சுட்டிக்காட்டினார்.

சுற்றுச்சூழலை அழிப்பதற்கான அந்த அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைத்ததே கடந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் பெற்ற மிக முக்கிய வெற்றியாகும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

Recent Posts

கல்முனை சந்தை வீதியை அதிரவைத்த 16 வயதுச் சிறுவனின் விபத்துச் சம்பவம்

கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…

7 மணத்தியாலங்கள் ago

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம்

தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…

8 மணத்தியாலங்கள் ago

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…

9 மணத்தியாலங்கள் ago

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி: 20 இலட்சம் ரூபாய் பணத்தைச் சுருட்டிய 41 வயதுப் பெண் அதிரடிக் கைது!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…

9 மணத்தியாலங்கள் ago

பொசன் பௌர்ணமியை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…

14 மணத்தியாலங்கள் ago

தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் கோர விபத்து

கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…

15 மணத்தியாலங்கள் ago