கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்த 11 தமிழ் இளைஞர்களைக் கப்பம் கோரி கடத்திச் சென்று, சட்டவிரோதமாகத் தடுத்து வைத்து, பின்னர் கட்டாயமாகக் காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பான மிக முக்கிய வழக்கில் பாரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், இலங்கை முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இவ்வழக்கில் ஒரு முக்கிய சந்தேகநபராக (Suspect) உத்தியோகபூர்வமாகப் பெயரிடப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில், எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகுமாறு முன்னாள் கடற்படைத் தளபதிக்கு நீதிமன்றம் இன்று (10) அழைப்பாணை (Summons) பிறப்பித்துள்ளது.
பின்னணி மற்றும் குற்றச்சாட்டு விபரங்கள்:
கடத்தப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கோ அல்லது இக்கடத்தல்களை மேற்கொண்ட பிரதான கடத்தல்காரரான கடற்படை அதிகாரி பிரசாத் ஹெட்டியாராச்சி உள்ளிட்டவர்களுக்குப் புகலிடம் அளித்து, அவர்களைச் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கச் செய்ததற்கோ முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக சிஐடி மேற்கொண்ட அண்மைக்கால விசாரணைகளில் ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது. இதனையடுத்தே, கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…
தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…
இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…
கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…