இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கோலாகலமாக அரங்கேறவுள்ள பத்தாவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (12) வெள்ளிக்கிழமை இரவு உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகிறது. பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் (Edgbaston) விளையாட்டரங்கில் இன்று இரவு 11.00 மணிக்கு நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்க ஆட்டத்தில் இலங்கை மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மகளிர் ரி20 கிரிக்கெட் வரலாற்றை நோக்கும் போது இங்கிலாந்து அணி பெருமளவில் முன்னிலையில் உள்ளது.
2009ஆம் ஆண்டு முதல் அனைத்து உலகக் கிண்ண அத்தியாயங்களிலும் விளையாடி, தற்போது தனது 10ஆவது உலகக் கிண்ணத்தில் தடம் பதிக்கும் இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து இப்போட்டி குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்: “நாங்கள் மைதானத்தில் அச்சமின்றி விளையாட வேண்டும். இன்றைய போட்டியில் எமது முழுத் திறமையையும் வெளிப்படுத்தினால் எம்மால் புதிய வரலாறு படைக்க முடியும். இங்கிலாந்து அணி தங்களது சொந்த மண்ணில், பெருமளவிலான ரசிகர்களுக்கு மத்தியில் ஆடுவதால் அவர்கள் மீதே அதிக அழுத்தம் இருக்கும். நாங்கள் பலவீனர்கள் (Underdogs) என்ற குறிச்சொல்லுடன் களமிறங்குவதால் எமக்குப் பெரிய அழுத்தங்கள் எதுவும் இல்லை” எனத் தெரிவித்தார்.
இணையுங்கள் →Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இன்றைய முக்கிய போட்டிக்காக விளையாடவுள்ள இறுதி 11 பேர் கொண்ட இலங்கை அணியின் விபரத்தை அணி முகாமைத்துவம் வெளியிட்டுள்ளது. எனினும், அணியின் அனுபவமிக்க முன்னணி துடுப்பாட்ட வீராங்கனையான ஹசினி பெரேராவுக்கு (Hasini Perera) இன்றைய போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான உத்தியோகபூர்வ காரணத்தை இலங்கை அணி முகாமைத்துவம் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…
தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…
இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…
கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…