‘அஸ்வெசும’ பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு இன்று நிதியொதுக்கீடு! 1.2 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுக்கு 11.83 பில்லியன் ரூபா விடுவிப்பு!
‘அஸ்வெசும’ நலன்புரி திட்டத்தின் கீழ், 2026 ஜூலை மாதத்திற்குரிய கொடுப்பனவுகள் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் இன்று (15) வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இரு கட்டங்களின் கீழ் இந்த நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
முதற்கட்டத்தின் கீழ் 1,012,812 பயனாளி குடும்பங்களுக்கு 9,357,346,250 ரூபா (கிட்டத்தட்ட 9.36 பில்லியன் ரூபா) நிதி இன்று வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.
அதேவேளை, இரண்டாம் கட்டத்தின் கீழ் 211,647 பயனாளி குடும்பங்களுக்கு 2,468,250,000 ரூபா (கிட்டத்தட்ட 2.47 பில்லியன் ரூபா) நிதி உரிய அஸ்வெசும வங்கி கணக்குகளில் இன்று வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், இன்றைய தினத்தில் மாத்திரம் இவ்விரு கட்டங்களின் கீழும் மொத்தம் 1,224,459 குடும்பங்களுக்காக 11,825,596,250 ரூபா (சுமார் 11.83 பில்லியன் ரூபா) அஸ்வெசும நலன்புரி நிதி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 383 வேலைவாய்ப்புகள்! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு! இலங்கை பொலிஸ் துணைச் சேவையில் (Police Auxiliary…
களுவாஞ்சிக்குடியில் ரூ. 29.5 மில்லியனில் நவீன தபால் நிலையம்! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திறந்து வைத்தார்! களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நவீன…
கட்டுநாயக்கவில் சுங்கப்பிரிவு அதிரடி! 200 மில்லியன் ரூபா பெறுமதியான 'ஹசீஸ்' போதைப்பொருளுடன் கனடா நாட்டவர் கைது! கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச…
2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 இல் ஆரம்பம்! அனுமதி அட்டைத் திருத்தங்களுக்கு ஓகஸ்ட் 03 இறுதி நாள்!…
12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் மேஷம் பலன்: உங்களின் கடின உழைப்பிற்கு இன்று சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும்…
யாழ்ப்பாணத்தில் “வயலின் வித்துவான் லக்ஷமிநாராயண வீதி” உத்தியோகபூர்வமாகத் திறப்பு! இந்திய - இலங்கை முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு! உலகப் புகழ்பெற்ற…