Categories: உள்ளூர்

மட்டக்களப்பில் நெஞ்சை உலுக்கிய சோகம்!

மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி (Lodge) ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில் சிக்கி 3 மற்றும் 5 வயதுடைய இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இன்று (27) பிற்பகல் அளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதுடன், தீப்பரவலின் போது வெளியான கடுமையான நச்சுப் புகையை சுவாசித்தமையினாலேயே அறையில் தங்கியிருந்த இரண்டு சிறுவர்களும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

உயிரிழந்த பிள்ளைகளின் தாய் மட்டக்களப்பில் உள்ள போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பார்ப்பதற்காக, பிள்ளைகளின் தந்தை தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பதுளையிலிருந்து மட்டக்களப்பிற்கு வந்துள்ளார்.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் அறையெடுத்து தங்கியிருந்த நிலையில், பிள்ளைகள் இருவரையும் அறையிலேயே இருக்கச் செய்துவிட்டு தந்தை ஏதோ ஒரு தேவைக்காக வெளியில் சென்றுள்ளார். இந்தச் சந்தர்ப்பத்திலேயே அவர்கள் தங்கியிருந்த விடுதி அறையில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

  • 3 வயதுடைய ஆண் பிள்ளை
  • 5 வயதுடைய பெண் பிள்ளை

தந்தை வெளியில் சென்றிருந்த சில நிமிடங்களில் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலிஸார் தீ விபத்துக்கான துல்லியமான காரணம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

Recent Posts

கல்முனை சந்தை வீதியை அதிரவைத்த 16 வயதுச் சிறுவனின் விபத்துச் சம்பவம்

கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…

9 පැය ago

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம்

தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…

10 පැය ago

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…

11 පැය ago

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி: 20 இலட்சம் ரூபாய் பணத்தைச் சுருட்டிய 41 வயதுப் பெண் அதிரடிக் கைது!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…

11 පැය ago

பொசன் பௌர்ணமியை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…

16 පැය ago

தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் கோர விபத்து

கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…

17 පැය ago