ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனத்தின் மூலோபாய மீளாய்வு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை (Strategic Review and Restructuring) அவசரமாக முன்னெடுப்பதற்காக, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரியவின் தலைமையில் புதிய உயர்மட்டக் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பரந்த பேரினப் பொருளாதார சூழலின் முன்னோக்குகளைக் கருத்திற் கொண்டு, தேசிய விமான சேவை நிறுவனத்தில் விரிவான மூலோபாய மீளாய்வை மேற்கொள்வது தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்தின் அவசர முன்னுரிமையாகும் என கண்டறியப்பட்டதை அடுத்தே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய தலைவராகச் செயற்படும் இக்குழுவில் பின்வரும் துறைசார் நிபுணர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்:
இந்த மீளாய்வு மற்றும் மறுசீரமைப்பின் முக்கிய நோக்கம், அரசாங்கத்தின் மீதான நீண்டகால நிதிச் சுமையைக் குறைப்பதாகும். அதன் மூலம் நிதி ரீதியாக நிலைபேறான மற்றும் வணிக ரீதியாகச் செயற்திறனான ஒரு தேசிய விமான சேவையை இந்நாட்டில் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் இறுதி இலக்காகும்.
இப்பணிகளில் பரிவர்த்தனை ஆலோசகராக (Transaction Advisor) செயற்படும் சர்வதேச நிதி கூட்டுத்தாபனத்துடன் (International Finance Corporation – IFC) இணைந்து நெருக்கமாகச் செயற்படுவதற்காகவே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இந்த மூலோபாய மீளாய்வு மற்றும் மறுசீரமைப்புக்கான விசேட குழு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…
தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…
இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…
கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…