நயினாதீவு – குறிகாட்டுவான் இடையிலான புதிய பயணிகள் படகு கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தில்: சீனாவில் இருந்து எஞ்சின் வந்தவுடன் சேவை ஆரம்பம்!
யாழ்ப்பாணம் நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான் ஆகிய பகுதிகளுக்கு இடையில் கடற்போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்துவதற்காக, வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் (RDA) தயாரிக்கப்பட்டு வரும் புதிய பயணிகள் படகின் கட்டுமானப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.
நயினாதீவு நாகதீப விகாரை மற்றும் ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு வருகை தரும் பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் பிரதேச மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த புதிய நவீன படகு கட்டமைக்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்த படகிற்கான பிரதான எஞ்சின் (Engine) சீனாவில் இருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்படவுள்ளது. சீனாவிலிருந்து எஞ்சின் கொண்டு வரப்பட்டு படகில் பொருத்தப்பட்ட பின்னர், இந்த புதிய பயணிகள் படகுச் சேவை உத்தியோகபூர்வமாக மக்களின் பயன்பாட்டிற்காக ஆரம்பிக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…
தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…
இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…
கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…