சாவகச்சேரியில் புதிய பொலிஸ் உத்தியோகத்தர் விடுதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவினால் திறந்து வைப்பு!
யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் புதிதாக அமைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் விடுதி, நேற்று (14) பிற்பகல் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கான (HQI) இந்த உத்தியோகபூர்வ விடுதியானது, சாவகச்சேரி கச்சாய் வீதியில் அமைந்துள்ள பொலிஸ் திணைக்களத்திற்குச் சொந்தமான காணியில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவுடன், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், பொலிஸ்மா அதிபர் (IGP), வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
புதிய கட்டடத்தினை நாடா வெட்டித் திறந்து வைத்த அமைச்சர், அதன்பின்னர் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்தும் அங்கிருந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…
தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…
இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…
கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…