உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: எம்பி அர்ச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகைக்குச் செருப்பு மாலை!

யாழ்ப்பாணத்தில் பரபரப்பு! எம்பி அர்ச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகைக்குச் செருப்பு மாலை: தெல்லிப்பளை கூட்டக் குழப்பத்தின் எதிரொலி!

யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகை (Cut-out) வைக்கப்பட்டு, அதற்குச் செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட விசித்திரமான மற்றும் பரபரப்பான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக நடைபெறும் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்வது, சபை நாகரீகமின்றிச் செயற்படுவது மற்றும் கூட்டங்களை திட்டமிட்டுக் குழப்புவது போன்ற செயல்களில் அர்ச்சுனா இராமநாதன் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகப் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் பரவலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

இந்த நிலையில், நேற்று (18) நடைபெற்ற தெல்லிப்பளை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலும் அர்ச்சுனா இராமநாதன் கலந்துகொண்டு மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்களில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான காணொளிகள் (Videos) சமூக ஊடகங்களில் வெளியாகி, பொதுமக்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களையும் விவாதங்களையும் தோற்றுவித்துள்ளது.

இந்தச் சபை நாகரீகமற்ற தொடர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே, யாழ்ப்பாண நகரின் பிரதான வீதியில் அவரது பதாகைக்குச் செருப்பு மாலை அணிவித்து மக்கள் தங்களது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் தற்போது யாழ். அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

Recent Posts

கல்முனை சந்தை வீதியை அதிரவைத்த 16 வயதுச் சிறுவனின் விபத்துச் சம்பவம்

கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…

6 පැය ago

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம்

தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…

7 පැය ago

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…

8 පැය ago

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி: 20 இலட்சம் ரூபாய் பணத்தைச் சுருட்டிய 41 வயதுப் பெண் அதிரடிக் கைது!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…

8 පැය ago

பொசன் பௌர்ணமியை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…

13 පැය ago

தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் கோர விபத்து

கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…

14 පැය ago