இலங்கையின் முதலாவது வெந்நீர் நீச்சல் தடாகத்திற்கு பண்டாரவளையில் அடிக்கல் நாட்டப்பட்டது! 14 கோடி ரூபா செலவில் அதிநவீன திட்டம் ஆரம்பம்!
கிராமப்புறங்களில் உள்ள திறமையான விளையாட்டு வீரர்களை தேசிய மற்றும் சர்வதேச நிலைக்குக் கொண்டு செல்வதற்காக, மாகாண மட்டங்களில் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் கொள்கைப் பிரகடனமான “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற திட்டத்தின் கீழ், இலங்கையின் முதலாவது வெந்நீர் நீச்சல் தடாகத்திற்கான (Heated Swimming Pool) அடிக்கல் நாட்டும் விழா நேற்று (07) பண்டாரவளையில் மிக விமர்சையாக நடைபெற்றது.
பண்டாரவளையில் அமைந்துள்ள உவ மாகாண விளையாட்டு வளாகத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய நீச்சல் தடாகம் அமையவுள்ளது. இந்த அதிநவீன விளையாட்டு மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ. 144,191,250.00 இற்கும் அதிகமான நிதி மானியமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டமானது இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சு மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் மிகக் குறுகிய காலத்திற்குள் கட்டி முடிக்கப்படவுள்ளது.
எப்போதும் குளிர்ச்சியான காலநிலை நிலவும் பண்டாரவளைப் பகுதியில் இந்த வெந்நீர் நீச்சல் தடாகம் அமைக்கப்படுவதன் மூலம், ஊவா மாகாணத்தைச் சேர்ந்த பாடசாலை பிள்ளைகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தங்களது திறமைகளை எவ்வித காலநிலைத் தடைகளுமின்றி, குளிர்காலத்திலும் தடையின்றிப் பயிற்சி பெற்று சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கு இது ஒரு சிறந்த தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 இல் ஆரம்பம்! அனுமதி அட்டைத் திருத்தங்களுக்கு ஓகஸ்ட் 03 இறுதி நாள்!…
12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் மேஷம் பலன்: உங்களின் கடின உழைப்பிற்கு இன்று சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும்…
யாழ்ப்பாணத்தில் “வயலின் வித்துவான் லக்ஷமிநாராயண வீதி” உத்தியோகபூர்வமாகத் திறப்பு! இந்திய - இலங்கை முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு! உலகப் புகழ்பெற்ற…
பாடசாலைகளின் இரண்டாம் தவணை நிறைவு! மூன்றாம் தவணை ஆரம்பமாகும் திகதிகளை அறிவித்தது கல்வி அமைச்சு! 2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கப்…
12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் மேஷம் பலன்: தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்! கைதுக்கு எதிரான மனு மீது மேலதிக பரிசீலனை! தாம் கைது…