உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்த்து வரும் பதுளை – சொரணாதோட்ட பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க துன்ஹிந்த நீர்வீழ்ச்சி (Dunhinda Waterfall) வளாகத்தில், அதிநவீன பார்வையாளர் மையத்தை (Viewing Deck) அமைக்கும் திட்டம் இன்று திங்கட்கிழமை (27) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தலைமையில், துன்ஹிந்த நீர்வீழ்ச்சியின் பழைய பார்வையாளர் மேடைக்கு அருகில் இதற்கான விசேட நிகழ்வு நடைபெற்றது.
ஊவா மாகாணத்தின் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் துறையை மேலும் சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தவும், நீர்வீழ்ச்சியைப் பார்வையிட வரும் பயணிகளுக்குத் தேவையான நவீன உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் அரசாங்கம் முன்னுரிமை அளித்துச் செயற்பட்டு வருகின்றது.
இந்நிகழ்வில் சொரணாதோட்ட பிரதேச சபையின் தவிசாளர் ஜெயலத் எதிரிமான்ன உள்ளிட்ட பிரதேச அரசியல் தலைவர்கள், சுற்றுலாத்துறை அதிகாரிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
மதுசார இழப்பு எல்லை 0.1% ஆகக் குறைப்பு! மதுவரித் திணைக்களத்தின் தீர்மானத்திற்கு உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு! மதுபான உற்பத்தி மற்றும்…
இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 383 வேலைவாய்ப்புகள்! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு! இலங்கை பொலிஸ் துணைச் சேவையில் (Police Auxiliary…
களுவாஞ்சிக்குடியில் ரூ. 29.5 மில்லியனில் நவீன தபால் நிலையம்! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திறந்து வைத்தார்! களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நவீன…
கட்டுநாயக்கவில் சுங்கப்பிரிவு அதிரடி! 200 மில்லியன் ரூபா பெறுமதியான 'ஹசீஸ்' போதைப்பொருளுடன் கனடா நாட்டவர் கைது! கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச…
2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 இல் ஆரம்பம்! அனுமதி அட்டைத் திருத்தங்களுக்கு ஓகஸ்ட் 03 இறுதி நாள்!…
12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் மேஷம் பலன்: உங்களின் கடின உழைப்பிற்கு இன்று சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும்…