விளையாட்டு

வெறும் 9 ஓட்டங்கள் மட்டுமே! சூப்பர் ஓவரில் சூர்யவன்ஷியை திணறடித்து இலங்கை ‘ஏ’ அணிக்கு வெற்றி தேடித்தந்த மதுலன்!

யாழ்ப்பாண மண்ணிலிருந்து இலங்கை கிரிக்கெட் உலகிற்குப் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள 19 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மதுலன், தனது இரண்டாவது List A போட்டியிலேயே சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையிலான அதிரடி சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (15) நடைபெற்ற இந்தியா ‘ஏ’ மற்றும் இலங்கை ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடரின் பிரதான போட்டி சமநிலையில் (Tie) முடிவடைந்தது. இதனையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க நடத்தப்பட்ட ‘சூப்பர் ஓவர்’ (Super Over) களத்தில் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் சிலிர்க்க வைக்கும் திருப்புமுனை அரங்கேறியது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ‘ஏ’ அணி சூப்பர் ஓவரில் 18 ஓட்டங்களைப் பெற்று, இந்தியா ‘ஏ’ அணிக்கு 19 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது. இந்திய அணிக்கு வெற்றிபெற 19 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், அண்மைய ஐ.பி.எல் (IPL 2026) தொடரில் அதிக சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்த இந்திய ‘ஏ’ அணியின் நட்சத்திர அதிரடி துடுப்பாட்ட வீரர் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) மற்றும் சூர்யான்ஷ் ஷெட்ஜ் ஆகியோர் களமிறங்கினர்.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

இலங்கை அணியின் கேப்டன் சஹான் ஆராச்சிகே, இந்த இக்கட்டான மற்றும் கடுமையான அழுத்தங்கள் நிறைந்த இறுதி ஓவரை வீசும் பெரும் பொறுப்பை யாழ்ப்பாணம் புனித ஜோன்ஸ் கல்லூரியின் முன்னாள் மாணவரான இளம் வீரர் குகதாஸ் மதுலனிடம் ஒப்படைத்தார்.

தனது அசாத்தியமான லசித் மலிங்கா மற்றும் மதீஷ பத்திரண பாணியிலான ‘Sling-arm’ பந்துவீச்சு முறையைக் கொண்ட மதுலன், உலகத்தரம் வாய்ந்த இந்திய துடுப்பாட்ட வீரர்களைத் திணறடித்தார். சூர்யவன்ஷி போன்ற அதிரடி மன்னர்கள் களத்தில் இருந்த போதிலும், பதற்றமின்றி பந்துவீசிய மதுலன், அந்த ஓவரில் வெறும் 9 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இலங்கை ‘ஏ’ அணிக்கு மறக்க முடியாத ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்.

வெறும் 19 வயதேயான குகதாஸ் மதுலன், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் வலைப் பந்துவீச்சாளராகவும் தோனியின் பாராட்டைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டான சூழ்நிலைகளிலும் அழுத்தங்களை எதிர்கொண்டு திறமையை நிரூபித்துள்ள இந்த யாழ்ப்பாணத்து இளைஞர், இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் எதிர்காலப் பெரும் பலமாக மாறுவார் எனப் பலரும் பாராட்டி வருகின்றன

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

Share
Published by
elm_admin92

Recent Posts

கல்முனை சந்தை வீதியை அதிரவைத்த 16 வயதுச் சிறுவனின் விபத்துச் சம்பவம்

கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…

4 மணத்தியாலங்கள் ago

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம்

தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…

5 மணத்தியாலங்கள் ago

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…

5 மணத்தியாலங்கள் ago

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி: 20 இலட்சம் ரூபாய் பணத்தைச் சுருட்டிய 41 வயதுப் பெண் அதிரடிக் கைது!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…

5 மணத்தியாலங்கள் ago

பொசன் பௌர்ணமியை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…

11 மணத்தியாலங்கள் ago

தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் கோர விபத்து

கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…

11 மணத்தியாலங்கள் ago