சவூதியில் நேர்ந்த பெரும் சோகம்! ‘அரம்கோ’ நிறுவன உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் 14 பேர் உடல்சிதறிப் பலி!
சவூதி அரேபியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனமான ‘அரம்கோ’ (Aramco) நிறுவனத்துக்குச் சொந்தமான உலங்கு வானூர்தி (ஹெலிகாப்டர்) ஒன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ராஸ் தனூராவில் நேர்ந்த விபத்து: சவூதி அரேபியாவின் வளைகுடா கரையோரத்தில் அமைந்துள்ள முக்கிய எண்ணெய் மற்றும் தொழில் மையமான ‘ராஸ் தனூரா’ (Ras Tanura) பகுதியிலேயே இந்தத் துரதிர்ஷ்டவசமான விபத்து நேர்ந்துள்ளது. அரம்கோ நிறுவனத்தின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்கள் அனைவரும் சவூதி பிரஜைகள்: இந்த விபத்தில் உலங்கு வானூர்தியில் பயணித்த 14 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த அனைவரும் சவூதி அரேபிய பிரஜைகள் என்பதைச் சவூதி செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
தீவிர விசாரணை: இந்த விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. எவ்வாறாயினும், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளைச் சவூதி எரிசக்தி அமைச்சு மற்றும் அதுடன் தொடர்புடைய பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் சவூதி அரேபியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



