ஹோர்முஸ் நீரிணையில் சைப்ரஸ் கப்பல் மீது ஈரான் தாக்குதல்! பதிலடியாக அமெரிக்கா புதிய கட்டத் தாக்குதல் – நீரிணை மூடப்பட்டதால் பெரும் பதற்றம்!
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் சென்ற சைப்ரஸ் நாட்டு வணிகக் கப்பல் ஒன்றின் மீது ஈரான் இராணுவம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா புதிய கட்டத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதலானது இந்த வாரத்தில் அமெரிக்காவினால் ஈரான் மீது நடத்தப்பட்ட மூன்றாவது சுற்றுத் தாக்குதல் என அமெரிக்க மத்திய கட்டளை மையம் (Centcom) தெரிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட பாதையில் இருந்து விலகிச் சென்றதாகவும், அதன் கண்காணிப்பு அமைப்புகளை (Tracking Systems) அணைத்துவிட்டுச் சென்றதாகவும் கூறி ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) அந்த கப்பலைத் தாக்கியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, பலமுறை எச்சரித்தும் கேட்காததால், ஒரு வணிகக் கப்பல் மீது எச்சரிக்கையாகக் கப்பல் ஏவுகணையை (Cruise Missile) ஏவி, அதைத் தடுத்து நிறுத்தியதாக ஈரான் தரப்பில் கூறப்பட்டது.
ஈரானின் இந்த “வெளிப்படையான தாக்குதலால்” சைப்ரஸ் கப்பலின் இயந்திர அறை கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அது பயணத்தைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதுடன், கப்பலில் இருந்த மாலுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு ஈரான் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டும், அவர்கள் மீண்டும் அதே தவறைச் செய்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், “ஈரான் தவறான முடிவை எடுத்துவிட்டது, அதற்கான விளைவை இப்போது சந்திக்கிறது” என்றும் அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. அத்துடன், நீரிணையை மூடியதால் அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு “ஆக்கிரமிப்புக்கும்” கடும் பதிலடி கொடுக்கப்படும் என்றும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் இலக்கு வைக்கப்படும் என்றும் ஈரான் அச்சுறுத்தியுள்ளது. இதனால் உலக அளவில் கப்பல் போக்குவரத்து மற்றும் சர்வதேச அரசியலில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 383 வேலைவாய்ப்புகள்! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு! இலங்கை பொலிஸ் துணைச் சேவையில் (Police Auxiliary…
களுவாஞ்சிக்குடியில் ரூ. 29.5 மில்லியனில் நவீன தபால் நிலையம்! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திறந்து வைத்தார்! களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நவீன…
கட்டுநாயக்கவில் சுங்கப்பிரிவு அதிரடி! 200 மில்லியன் ரூபா பெறுமதியான 'ஹசீஸ்' போதைப்பொருளுடன் கனடா நாட்டவர் கைது! கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச…
2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 இல் ஆரம்பம்! அனுமதி அட்டைத் திருத்தங்களுக்கு ஓகஸ்ட் 03 இறுதி நாள்!…
12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் மேஷம் பலன்: உங்களின் கடின உழைப்பிற்கு இன்று சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும்…
யாழ்ப்பாணத்தில் “வயலின் வித்துவான் லக்ஷமிநாராயண வீதி” உத்தியோகபூர்வமாகத் திறப்பு! இந்திய - இலங்கை முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு! உலகப் புகழ்பெற்ற…