ஹட்டன் டிக்கோயா நகரில் கணவன் மற்றும் மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, அவரிடமிருந்த 18 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சந்தேகநபரை வரும் ஜூன் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று (24) ஹட்டன் மாவட்ட நீதிபதியும் நீதவானுமான பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஹாலிஎல, தெமோதரை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய, ஒரு பிள்ளையின் தந்தையான ‘செல்லையா மனோஜ்’ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி இந்த கொடூர இரட்டைக் கொலையைச் செய்துவிட்டு தப்பிச் சென்ற இவர், பொகவந்தலாவை பெட்ரோஸோ (Pedro) தோட்டத்தில் தலைமறைவாகியிருந்த வேளையில், நேற்று (23) ஹட்டன் மற்றும் பொகவந்தலாவை பொலிஸாரால் கூட்டு நடவடிக்கையொன்றின் மூலம் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…
தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…
இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…
கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…