Categories: உள்ளூர்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய காணொளி ஊடாக சாட்சியமளிக்க நீதிமன்றம் இணக்கம்.

லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகநாந்தன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காணொளி வாயிலாக சாட்சியமளிப்பதற்கு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று யாழ்ப்பாணத்தில் வைத்து இந்த இரு சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம், அவர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவின் (Habeas Corpus) அடிப்படையில் பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

குறித்த கடத்தல் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டின் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றம் முன்னதாகவே அழைப்பாணை அனுப்பியிருந்தது. அவரும் தான் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் முன்னதாக உறுதிமொழி வழங்கியிருந்தார்.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

எனினும், தற்போது நிலவும் பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி தம்மால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியாது என கோட்டாபய ராஜபக்ஷ தரப்பால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்தே, தற்போது காணொளி வாயிலாக சாட்சியமளிக்க யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்
elm_admin92

Share
Published by
elm_admin92

Recent Posts

பொசன் பௌர்ணமியை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…

5 மணத்தியாலங்கள் ago

தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் கோர விபத்து

கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…

6 மணத்தியாலங்கள் ago

போதைப்பொருள் நெட்வொர்க்கை உடைக்க அரசாங்கம் அதிரடி

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 232 குற்றவாளிகளுக்குச் சர்வதேச சிவப்பு அறிவித்தல்! நாடுகள் வாரியான விபரங்களை வெளியிட்டார் அமைச்சர் ஆனந்த விஜேபால! சர்வதேச…

18 மணத்தியாலங்கள் ago

பாக்ஸ் ஆபீஸில் சாமியாடும் சூர்யா

தமிழக பாக்ஸ் ஆபீஸில் சூர்யாவின் விஸ்வரூபம்! தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 191 கோடிக்கும் மேல் வசூலித்து 'கருப்பு' திரைப்படம் இமாலய…

1 நாள் ago

க. பொ. த உயர்தரப் பரீட்சை – 2026 திருத்தம் செய்யப்பட்ட நேர அட்டவணை

க.பொ.த உயர்தரப் பரீட்சை - 2026 (G.C.E. A/L 2026) நடத்துவது மற்றும் அதன் நேர அட்டவணைத் திருத்தங்கள் தொடர்பான…

1 நாள் ago

ரூ. 55 மில்லியன் செலவில் புதுப்பொலிவு பெறும் பம்பலப்பிட்டி ரயில் நிலையம்: பணிகள் அதிவேகமாக முன்னெடுப்பு!

ரூ. 55 மில்லியன் நிதியுதவியுடன் புதுப்பொலிவு பெறும் பம்பலப்பிட்டி ரயில் நிலையம்! அரச - தனியார் கூட்டுப் பங்களிப்பில் பணிகள்…

1 நாள் ago