பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலய பிரதான பாதை திருவிழாக் காலத்தில் திறப்பு! பலாலி கிழக்கு காணிகளை விடுவிக்கவும் இராணுவம் இணக்கம்!
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்திற்குச் செல்லும் பிரதான பாதையைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து விடுமாறு அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கைக்குத் தற்போதைய அரசாங்கத்தினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் தோழர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் விசேட பணிப்புரைக்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் தோழர் க. இளங்குமரன் அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியை நேரில் சந்தித்து, இது தொடர்பாக விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.
பாதுகாப்பு காரணங்களால் தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குறித்த பிரதான பாதை, ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழா நடைபெறும் காலப்பகுதியில் தினமும் காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்படவுள்ளது என்று இச்சந்திப்பின் மூலம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் காலங்களில் குறித்த பாதையை முழுமையாகப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நிரந்தரமாகத் திறப்பதற்கும் இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இக்கலந்துரையாடலின் போது பலாலி கிழக்கு பகுதி மக்களின் நீண்டகாலப் பிரச்சினையான அவர்களின் பூர்வீகக் காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. அந்த விடயத்திலும் சாதகமான பல முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 இல் ஆரம்பம்! அனுமதி அட்டைத் திருத்தங்களுக்கு ஓகஸ்ட் 03 இறுதி நாள்!…
12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் மேஷம் பலன்: உங்களின் கடின உழைப்பிற்கு இன்று சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும்…
யாழ்ப்பாணத்தில் “வயலின் வித்துவான் லக்ஷமிநாராயண வீதி” உத்தியோகபூர்வமாகத் திறப்பு! இந்திய - இலங்கை முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு! உலகப் புகழ்பெற்ற…
பாடசாலைகளின் இரண்டாம் தவணை நிறைவு! மூன்றாம் தவணை ஆரம்பமாகும் திகதிகளை அறிவித்தது கல்வி அமைச்சு! 2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கப்…
12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் மேஷம் பலன்: தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்! கைதுக்கு எதிரான மனு மீது மேலதிக பரிசீலனை! தாம் கைது…