உள்ளூர்

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலய பிரதான பாதை திறப்பு: மக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலய பிரதான பாதை திருவிழாக் காலத்தில் திறப்பு! பலாலி கிழக்கு காணிகளை விடுவிக்கவும் இராணுவம் இணக்கம்!

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்திற்குச் செல்லும் பிரதான பாதையைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து விடுமாறு அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கைக்குத் தற்போதைய அரசாங்கத்தினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் தோழர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் விசேட பணிப்புரைக்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் தோழர் க. இளங்குமரன் அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியை நேரில் சந்தித்து, இது தொடர்பாக விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

பாதுகாப்பு காரணங்களால் தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குறித்த பிரதான பாதை, ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழா நடைபெறும் காலப்பகுதியில் தினமும் காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்படவுள்ளது என்று இச்சந்திப்பின் மூலம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் காலங்களில் குறித்த பாதையை முழுமையாகப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நிரந்தரமாகத் திறப்பதற்கும் இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இக்கலந்துரையாடலின் போது பலாலி கிழக்கு பகுதி மக்களின் நீண்டகாலப் பிரச்சினையான அவர்களின் பூர்வீகக் காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. அந்த விடயத்திலும் சாதகமான பல முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

Recent Posts

உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அவசர எச்சரிக்கை

2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 இல் ஆரம்பம்! அனுமதி அட்டைத் திருத்தங்களுக்கு ஓகஸ்ட் 03 இறுதி நாள்!…

22 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசிபலன்: ஜூலை 25, 2026 (சனிக்கிழமை) | சனி பகவானின் அருளால் இன்று தடைகள் நீங்கி வெற்றி பெறப் போகும் ராசிகள் எவை?

12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் மேஷம் பலன்: உங்களின் கடின உழைப்பிற்கு இன்று சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும்…

22 மணத்தியாலங்கள் ago

யாழ்ப்பாணத்தில் உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞருக்கு கௌரவம்!

யாழ்ப்பாணத்தில் “வயலின் வித்துவான் லக்ஷமிநாராயண வீதி” உத்தியோகபூர்வமாகத் திறப்பு! இந்திய - இலங்கை முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு! உலகப் புகழ்பெற்ற…

2 நாட்கள் ago

மூன்றாம் தவணை பாடசாலைகள் மீண்டும் எப்போது ஆரம்பம்?

பாடசாலைகளின் இரண்டாம் தவணை நிறைவு! மூன்றாம் தவணை ஆரம்பமாகும் திகதிகளை அறிவித்தது கல்வி அமைச்சு! 2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கப்…

2 நாட்கள் ago

சுக்கிர பகவானின் அருளால் இன்று தனயோகமும் மகிழ்ச்சியும் பெறப்போகும் ராசிகள் எவை?

12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் மேஷம் பலன்: தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.…

2 நாட்கள் ago

தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி வழக்கு! நீதிமன்றம் வந்தார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்! கைதுக்கு எதிரான மனு மீது மேலதிக பரிசீலனை! தாம் கைது…

3 நாட்கள் ago