உள்ளூர்

நுகர்வோர் பொருட்கள் இறக்குமதி 32.8% அதிகரிப்பு

இலங்கையின் ஆடைத் துறை ஏற்றுமதி வருமானம் 7.3% வீழ்ச்சி: 3,693 மில்லியன் டொலராக விரிவடைந்தது வர்த்தகப் பற்றாக்குறை என மத்திய வங்கி அறிவிப்பு!

இலங்கையின் முதன்மை ஏற்றுமதித் துறைகளில் ஒன்றான துணி மற்றும் ஆடைத் துறையின் (Textile and Garment Sector) ஏற்றுமதி வருமானம், 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, 2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் துணி மற்றும் ஆடை ஏற்றுமதி மூலம் கிடைத்த வருமானம் 1,624.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் (1,751.8 மில்லியன் டொலர்கள்) 7.3 சதவீத வீழ்ச்சியாகும். உலகளாவிய சந்தை மாற்றங்களே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

எவ்வாறாயினும், இக்காலப்பகுதியில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் சற்று சாதகமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 4,315.6 மில்லியன் டொலர்களாக இருந்த மொத்த ஏற்றுமதி வருமானம், 2026 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 4,534.9 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.

ஏற்றுமதி வருமானம் சற்று உயர்ந்த போதிலும், நாட்டின் இறக்குமதிச் செலவினம் கணிசமாக உயர்ந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் 6,572.9 மில்லியன் டொலர்களாக இருந்த இறக்குமதிச் செலவு, 2026 இல் 8,227.9 மில்லியன் டொலர்கள் வரை பாரியளவில் அதிகரித்துள்ளது. இது 25.2 சதவீத வளர்ச்சியாகும். இதில் குறிப்பாக நுகர்வோர் பொருட்களின் இறக்குமதி 32.8 சதவீதத்தாலும், இடைநிலைப் பொருட்களின் இறக்குமதி 24.1 சதவீதத்தாலும், முதலீட்டுப் பொருட்களின் இறக்குமதி 19.8 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக, ஏற்றுமதி மூலம் கிடைத்த வருமானத்தை விட, இறக்குமதிக்கான செலவு பன்மடங்கு வேகமாக அதிகரித்தமையினால், 2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் நாட்டின் ஒட்டுமொத்த வர்த்தகப் பற்றாக்குறை (Trade Deficit) 3,693 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை கணிசமாக விரிவடைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை மேலும் எச்சரித்துள்ளது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

Recent Posts

கல்முனை சந்தை வீதியை அதிரவைத்த 16 வயதுச் சிறுவனின் விபத்துச் சம்பவம்

கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…

5 පැය ago

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம்

தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…

6 පැය ago

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…

6 පැය ago

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி: 20 இலட்சம் ரூபாய் பணத்தைச் சுருட்டிய 41 வயதுப் பெண் அதிரடிக் கைது!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…

6 පැය ago

பொசன் பௌர்ணமியை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…

12 පැය ago

தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் கோர விபத்து

கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…

12 පැය ago