உலகம்

பெரும் பரபரப்புக்கு மத்தியில் நீதிமன்றத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய்யின் விவாகரத்து வழக்கு: அடுத்த கட்டம் என்ன?

தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான சி. ஜோசப் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா சொர்ணலிங்கம் ஆகியோருக்கு இடையே விவாகரத்து கோரித் தொடரப்பட்ட வழக்கு, இன்று திங்கட்கிழமை (15) செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

கடந்த 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதியினருக்கு, ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், குடும்பக் கருத்து வேறுபாடுகள் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்தத் தகவல் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஊடகங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

முன்னதாக, ஏப்ரல் 20ஆம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பினரும் ஆஜராகாததால், ஜூன் 15ஆம் திகதியான இன்றைய விசாரணையில் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், இன்றைய விசாரணையின் போதும் இரு தரப்பிலும் யாரும் நேரில் ஆஜராகவில்லை. அவர்களது சட்டத்தரணிகளே நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் பொதுவெளியில் பிரபலமானவர்கள் என்பதால், பாதுகாப்பு காரணங்கள் மற்றும் இதர நிர்வாகச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, தங்களை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களித்து, காணொளி காட்சி (Video Conferencing) மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று இரு தரப்பிலும் ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இன்றைய விசாரணையின் போது, காணொளி காட்சி மூலம் ஆஜராகக் கோரிய மனுவைப் பரிசீலித்த நீதிபதி, இருவரினதும் மின்னஞ்சல் முகவரிகளை (Email ID) நீதிமன்றப் பதிவேட்டில் முறையாகப் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டதுடன், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். மேலும், மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு தொடர்பான முறையான மனுக்களைத் தாக்கல் செய்யுமாறும் இரு தரப்பு சட்டத்தரணிகளுக்கும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

Share
Published by
elm_admin92

Recent Posts

கல்முனை சந்தை வீதியை அதிரவைத்த 16 வயதுச் சிறுவனின் விபத்துச் சம்பவம்

கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…

4 පැය ago

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம்

தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…

5 පැය ago

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…

5 පැය ago

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி: 20 இலட்சம் ரூபாய் பணத்தைச் சுருட்டிய 41 வயதுப் பெண் அதிரடிக் கைது!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…

5 පැය ago

பொசன் பௌர்ணமியை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…

11 පැය ago

தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் கோர விபத்து

கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…

11 පැය ago