நீர்கொழும்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி விழா நாளை (17) மிக விமர்சையாக நடைபெறவுள்ளது: 1008 சங்காபிஷேகமும் விசேட மங்கள வாத்தியமும் ஏற்பாடு!
மேல் மாகாணம், நீர்கொழும்பு கடற்கரை வீதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மண்டலாபிஷேக பூர்த்தி விழாவானது நாளை (17.06.2026) புதன்கிழமை ஆலய பரிபாலன சபையினரால் மிக விமர்சையாகவும் பக்திப்பூர்வமாகவும் கொண்டாடப்படவுள்ளது.
நிகழும் பராபவ வருடம் ஆனித்திங்கள் 03ஆம் நாள் புதன்கிழமை, புனர்பூச நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய சுப நன்னாளில் எம்பெருமான் விநாயகப் பெருமானுக்குக் காலையில் சங்காபிஷேகம், விசேட பூசைகள், அன்னதானம் மற்றும் மாலையில் மூலஸ்தான பூசை, விசேட மேளக்கச்சேரி, வசந்த மண்டப பூசையைத் தொடர்ந்து சுவாமி வீதியுலா என்பன சிறப்பாக நடைபெறவுள்ளன.
நாளை இடம்பெறவுள்ள விசேட நிகழ்வுகளின் விபரம்:
இவ்விழாவின் கோயில் மங்கள வாத்தியத்தை ஆனந்தன் குழுவினரும், விசேட மங்கள வாத்தியத்தை ஈழத்துச் சிதம்பரம் ஆஸ்தான வித்துவான் தவில் வித்துவான் N. K. வீராச்சாமி அவர்களின் புதல்வர்களான காரைநகர் கண்ணன் குழுவினரும் இணைந்து வழங்கவுள்ளனர்.
இவ்விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் நீர்கொழும்பு கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபையின் செயலாளர் இ.ஆ.க. சொக்கநாதன் உள்ளிட்ட நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். எனவே, அடியார்கள் அனைவரும் ஆசாரசீலர்களாக வருகை தந்து, தங்களால் இயன்ற அபிஷேக திரவியங்களை வழங்கி, எம்பெருமானின் பூரண அருளைப் பெறுமாறு பக்திமுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…
தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…
இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…
கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…