அரபு நாடுகளில் முதல் முறை! 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக வலைத்தள கணக்குகள் தடை: ஐக்கிய அரபு அமீரகம் அதிரடிச் சட்டம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கான புதிய கட்டுப்பாடுகள் மற்றும் கடுமையான விதிகளுக்கு அந்நாட்டு அமைச்சரவை உத்தியோகபூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. அரபு நாடொன்றில் இத்தகையதொரு கடுமையான இணையக் கட்டுப்பாட்டுச் சட்டம் கொண்டு வரப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இப்புதிய சட்டத்தின்படி, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது 15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தின் கடுமையான கட்டுப்பாடுகள்:
சட்டத்திற்கான பின்னணி மற்றும் அவகாசம்: கடந்த 2024ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட உத்தியோகபூர்வக் கருத்துக்கணிப்பொன்றில், குழந்தைகள் தினமும் சராசரியாக 3 மணித்தியாலங்கள் வரை சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. இதனால் ஏற்படும் மனரீதியான மற்றும் இணையவழிப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்காகவே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த புதிய தொழில்நுட்ப விதிமுறைகளைத் தங்களது செயலிகளில் நடைமுறைப்படுத்துவதற்காகச் முன்னணி சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு (Meta, TikTok, X போன்றவை) ஓராண்டு காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் சிறுவர்களின் இணையப் பாதுகாப்பிற்காக இது போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையிலேயே, தற்போது ஐக்கிய அரபு அமீரகமும் இப்பட்டியலில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…
தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…
இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…
கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…