Categories: உலகம்

மறு அறிவித்தல் வரை ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம்: இந்தியத் தூதரகம் விடுத்துள்ள அதிதீவிர எச்சரிக்கை

ஈரானில் தீவிரமடைந்து வரும் போர் மற்றும் மோதல் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, மறு அறிவித்தல் வரும் வரை ஈரானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும், தற்போது அங்கு வசிக்கும் இந்தியர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தி இந்தியா இன்று (08) புதிய அவசரப் பயண ஆலோசனையை விடுத்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சகத்துடன் (MEA) ஒருங்கிணைந்து, ஈரானின் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் இந்த அவசர ஆலோசனையை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

அவசரப் பயண ஆலோசனையின் விபரங்கள்: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த 24 மணித்தியாலங்களில் ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், எந்தவொரு காரணத்திற்காகவும் ஈரானுக்குச் செல்வதை முழுமையாகத் தவிர்க்குமாறு இந்தியத் தூதரகம் தனது குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

மேலும், தற்போது ஈரானில் தங்கியிருக்கும் இந்தியப் பிரஜைகள் (மாணவர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்) தங்களின் பாதுகாப்பைக் கருதி, உடனடியாகக் கிடைக்கும் வர்த்தக விமானங்கள் அல்லது இதர போக்குவரத்து வழிகளைப் பயன்படுத்தி பாதுகாப்பான நாடுகளுக்கோ அல்லது இந்தியாவிற்கோ திரும்புவதற்கான அவசர ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

Share
Published by
elm_admin92

Recent Posts

கல்முனை சந்தை வீதியை அதிரவைத்த 16 வயதுச் சிறுவனின் விபத்துச் சம்பவம்

கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…

8 පැය ago

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம்

தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…

9 පැය ago

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…

9 පැය ago

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி: 20 இலட்சம் ரூபாய் பணத்தைச் சுருட்டிய 41 வயதுப் பெண் அதிரடிக் கைது!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…

9 පැය ago

பொசன் பௌர்ணமியை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…

14 පැය ago

தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் கோர விபத்து

கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…

15 පැය ago