உலகம்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜூலை 24 வரை நீடித்தது பாகிஸ்தான்

இந்திய விமான நிறுவனங்களுக்கான வான்வெளித் தடையை ஜூலை 24 வரை அதிரடியாக நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமான நிறுவனங்கள் தங்கள் நாட்டு வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்வரும் ஜூலை மாதம் 24ஆம் திகதி வரை நீடித்து பாகிஸ்தான் அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

முன்னதாக, பஹல்காம் பகுதியில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் முகமாக, கடந்த ஆண்டு மே மாதம் 7ஆம் திகதி இந்தியப் பாதுகாப்புப் படைகளால் ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindhoor) என்ற அதிரடி இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான எல்லை மோதல்கள் வெடித்தன. பின்னர், கடந்த ஆண்டு மே 9 அன்று இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு தற்காலிகத் தீர்வு எட்டப்பட்டது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

இருப்பினும், பஹல்காம் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்த பதற்றமான சூழ்நிலை காரணமாகப் பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவின் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய அரசு தடை விதித்தது. இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தானும் தங்கள் நாட்டு வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்துவதற்குக் கடுமையான தடையை விதித்தது.

அன்று முதல் இந்திய விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் இந்தத் தடையானது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போதைய நிலவரப்படி இந்தத் தடையை ஜூலை 24 வரை நீட்டிப்பதாகப் பாகிஸ்தான் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் இந்தத் தொடர் தடை உத்தரவு காரணமாக, மேற்கத்திய நாடுகளுக்குச் செல்லும் இந்தியப் பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களின் பயண நேரமும், எரிபொருள் செலவும் கணிசமாக அதிகரிக்கும் என விமானப் போக்குவரத்து வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

Share
Published by
elm_admin92

Recent Posts

கல்முனை சந்தை வீதியை அதிரவைத்த 16 வயதுச் சிறுவனின் விபத்துச் சம்பவம்

கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…

2 மணத்தியாலங்கள் ago

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம்

தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…

3 மணத்தியாலங்கள் ago

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…

3 மணத்தியாலங்கள் ago

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி: 20 இலட்சம் ரூபாய் பணத்தைச் சுருட்டிய 41 வயதுப் பெண் அதிரடிக் கைது!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…

3 மணத்தியாலங்கள் ago

பொசன் பௌர்ணமியை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…

9 மணத்தியாலங்கள் ago

தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் கோர விபத்து

கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…

9 மணத்தியாலங்கள் ago