இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோரை இணைத்து இணையத்தில் பரவிய ‘மெலடி’ (Melody) மிட்டாய் குறித்த வீடியோ காரணமாக, இந்தியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ‘பார்லே இண்டஸ்ட்ரீஸ்’ (Parle Industries) நிறுவனத்தின் பங்கு விலைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் உயர்வடைந்துள்ளன.
முதலீட்டாளர்களின் பெயர்க் குழப்பம்:
Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!
- உண்மையான தயாரிப்பு நிறுவனம்: உலகப் புகழ்பெற்ற ‘மெலடி’ மிட்டாய் உட்பட பல உணவுப் பொருட்களைத் தயாரிப்பது ‘பார்லே புராடக்ட்ஸ்’ (Parle Products) என்ற பொதுவெளியில் பட்டியலிடப்படாத (Unlisted Private Company) நிறுவனம்கூறப்படுகிறது.
- தொடர்பற்ற நிறுவனம்: பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ‘பார்லே இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்திற்கும், இந்த மிட்டாயைத் தயாரிக்கும் நிறுவனத்திற்கும் இடையே எந்தவொரு வணிகரீதியான தொடர்பும் இல்லை. இது வெறும் பெயரில் மட்டுமே ஒற்றுமையைக் கொண்ட வேறொரு நிறுவனமாகும்.
- எனினும், முதலீட்டாளர்கள் பெயரிலுள்ள ஒற்றுமை காரணமாகத் தவறாகப் புரிந்து கொண்டு அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு முண்டியடித்துள்ளனர்.
பங்குச்சந்தை நிலவரம்:
Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
- பிரதமர் நரேந்திர மோடி, இத்தாலியப் பிரதமருக்கு ‘பார்லே மெலடி’ மிட்டாய் பாக்கெட் ஒன்றை பரிசாக வழங்குவது போன்ற சமூக ஊடகப் பதிவு கடந்த புதன்கிழமை காட்டுத்தீ போல பரவியது.
- இதன் காரணமாக, புதன்கிழமையன்று அந்நிறுவனத்தின் பங்கு விலை 5% என்ற அதன் தினசரி உச்சவரம்பை (Upper Circuit) எட்டியது.
- இந்த நிலைமை இன்றும் (21) தொடர்ந்ததுடன், பார்லே இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை மீண்டும் ஒருமுறை 5% உச்சவரம்பைப் பதிவு செய்தது.
இதன்படி, புதன்கிழமையன்று 5.25 இந்திய ரூபாயாக இருந்த ஒரு பங்கின் விலை, வியாழக்கிழமை (இன்று) 5.51 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு வர்த்தக அமர்வுகளில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு விலை ஒட்டுமொத்தமாக 10% வளர்ச்சியைத் காண்பித்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.




