உள்ளூர்

பாடகர் சங்கீத்சனை விடுதலை செய்! மன்னாரில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) இந்த நாட்டிலிருந்து முழுமையாக நீக்க வேண்டும் என வலியுறுத்தியும், இச்சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரபல சொல்லிசைப் பாடகர் (Rapper) சங்கீத்சனை நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரியும் மன்னாரில் இன்று (11) காலை மாபெரும் கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) மன்னார் கிளை ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டம், இன்று காலை 10:00 மணியளவில் மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக மிகவும் அமைதியான முறையில் ஆரம்பமானது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

போராட்டத்திற்குத் திரண்ட மக்கள் அலை: இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் மாவட்டப் பொது அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள், மன்னார் பிரஜைகள் குழு, மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம், மகளிர் அமைப்புகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பதாகைகளை ஏந்தியவாறு கலந்துகொண்டனர்.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →
Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link