அமெரிக்காவின் கடுமையான கடல்வழி முற்றுகையை முறியடித்த ஈரான்; ஹோர்முஸ் நீரிணையில் இருந்து எண்ணெய் கப்பல்கள் வெளியேற்றம்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடிச் சரிவு!
அமெரிக்காவின் கடுமையான கடல்வழி முற்றுகையையும் மீறி, ஈரானின் முதலாவது கச்சா எண்ணெய் தாங்கி கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) இருந்து வெற்றிகரமாக வெளியேறியுள்ளன.
சுமார் இரண்டு மாத காலமாக நீடித்து வந்த அமெரிக்காவின் இந்த மிகக் கடுமையான கடல்வழி முற்றுகைக்கு மத்தியிலும், ஈரானிய எண்ணெய் கப்பல்கள் எவ்வித பாதிப்புகளுமின்றி பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாக சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் கண்காணிப்பு இணையதளம் (International Shipping Tracking Website) ஒன்று உத்தியோகபூர்வமாகச் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானிய கச்சா எண்ணெய் உலகளாவிய சந்தைக்கு தடையின்றி வரத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த கச்சா எண்ணெய்க்கான தட்டுப்பாடு கணிசமாகக் குறையும் என்ற பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதன் நேரடித் தாக்கமாக, சர்வதேச அளவில் பெஞ்ச்மார்க் (Benchmark) ஆகக் கருதப்படும் ‘ப்ரெண்ட்’ (Brent) கச்சா எண்ணெயின் விலை உலகச் சந்தையில் மேலும் சரிவைச் சந்தித்துள்ளது. தற்போதைய உலகளாவிய வர்த்தக நிலவரங்களின்படி, சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் (Barrel) 78.40 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது என்று வெளிநாட்டுப் பொருளாதார ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



