உள்ளூர்

தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் கோர விபத்து

கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்; இருவர் கவலைக்கிடம்!

கொழும்பில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (SLTB) சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர்.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பதுளை நோக்கிச் சென்ற போதே, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

விபத்தில் காயமடைந்த 42 பயணிகளும் உடனடியாகப் பிரதேசவாசிகளினதும் பொலிஸாரினதும் உதவியுடன் மீட்கப்பட்டு, தியத்தலாவை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர்களில் ஒருவர் மேலதிக அவசர சிகிச்சைக்காகப் பதுளை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தியத்தலாவை மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தியத்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link