கட்டுநாயக்கவில் சக்கர நாற்காலியில் வந்த பெண்ணிடம் ரூ. 10 மில்லியன் கொக்கைன் மீட்பு! வயிற்றுக்குள்ளும் போதைப்பொருள் உருண்டைகள்!
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (17) சக்கர நாற்காலியில் வந்த 54 வயதுடைய வெளிநாட்டுப் பெண் ஒருவர், சுமார் ரூ. 10 மில்லியன் தெரு மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருளுடன் சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கோலா நாட்டைச் சேர்ந்த இந்தப் பெண், அங்கோலாவிலிருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா மற்றும் டோஹா வழியாக QR 654 எனும் விமானம் மூலம் இலங்கை வந்தடைந்துள்ளார்.
விமான நிலைய சோதனைகளின் போது அதிகாரிகளின் பார்வையில் இருந்து தப்பிப்பதற்காகவே இந்தப் பெண் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தியுள்ளார். எனினும் சுங்க அதிகாரிகளின் தீவிர விசாரணைகளின் போது, தனது உடலில் மறைத்து வைத்திருந்த 14 கொக்கைன் அடங்கிய கெப்சியூல் உருண்டைகளை சுங்கப் பிரிவினரிடம் அவர் தானாகவே முன்வந்து ஒப்படைத்துள்ளார்.
அத்துடன் நில்லாது, தான் மேலும் அவ்வாறான பல போதைப்பொருள் வில்லைகளை விழுங்கியுள்ளதாகவும் அவர் அதிகாரிகளிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுவரை மீட்கப்பட்டுள்ள 237 கிராம் எடையுள்ள போதைப்பொருளின் தெரு மதிப்பு சுமார் ரூ. 10 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகநபர் மற்றும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் என்பன மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அவரது வயிற்றுக்குள் இருப்பதாகக் கூறப்படும் ஏனைய போதைப்பொருள் உருண்டைகளை மருத்துவ உதவியுடன் பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகள் தற்போது பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மதுசார இழப்பு எல்லை 0.1% ஆகக் குறைப்பு! மதுவரித் திணைக்களத்தின் தீர்மானத்திற்கு உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு! மதுபான உற்பத்தி மற்றும்…
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்த்து வரும் பதுளை – சொரணாதோட்ட பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள…
இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 383 வேலைவாய்ப்புகள்! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு! இலங்கை பொலிஸ் துணைச் சேவையில் (Police Auxiliary…
களுவாஞ்சிக்குடியில் ரூ. 29.5 மில்லியனில் நவீன தபால் நிலையம்! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திறந்து வைத்தார்! களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நவீன…
கட்டுநாயக்கவில் சுங்கப்பிரிவு அதிரடி! 200 மில்லியன் ரூபா பெறுமதியான 'ஹசீஸ்' போதைப்பொருளுடன் கனடா நாட்டவர் கைது! கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச…
2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 இல் ஆரம்பம்! அனுமதி அட்டைத் திருத்தங்களுக்கு ஓகஸ்ட் 03 இறுதி நாள்!…