உள்ளூர்

களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சித் செய்தி

களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில், 20 கிலோமீட்டர் நீளமுடைய 12 முக்கிய வீதிகளைப் புனரமைக்கும் விசேட வீதி அபிவிருத்தித் திட்டம் இன்று வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் 7 வீதிகளும், கொழும்பு மாவட்டத்தில் 5 வீதிகளுமாக மொத்தம் 12 வீதிகள் இத்திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கப்படவுள்ளன.

இதற்காக மொத்தமாக 692 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இதன்கீழ் பண்டாரகம பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ரேருகன சமரநாயக்க வீதி (1.22 கி.மீ) மற்றும் கனத்தகொட வீதி (2.36 கி.மீ) ஆகியவற்றின் புனரமைப்புப் பணிகள் இன்று உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

உள்ளடக்கப்படும் ஏனைய வீதிகள்: களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை, புலத்சிங்கள, களுத்துறை ஆகிய பகுதிகளில் கும்புக நாரங்கஹஹேன வீதி, ரணவிரு சமந்த மாவத்தை, எடகந்த வீதி, காலாஹேன சந்தி முதல் மீரஷேன தொழிற்சாலை வரையிலான வீதி, கோனதூவ கவட்டயாகொட திக்வெல்ல வீதி ஆகிய 5 வீதிகளும், கொழும்பு மாவட்டத்தின் ஹோமாகம மற்றும் பாடுக்கை பகுதிகளில் முனமலே வீதி, கஹவல நாகந்தல வீதி, போபே வெவல்கெட்டிய மாஹிங்கல வீதி, தம்பே பைகேவத்தை வீதி, போபேவத்தை வீதி ஆகிய 5 வீதிகளும் இத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படவுள்ளன.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

இந்த பாரிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் அனைத்துப் பணிகளும் வரும் 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05 ஆம் திகதிக்குள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link