2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் (Easter Sunday Attacks) தொடர்பான விசாரணைகளில், தம்மை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் (Court of Appeal) விசேட ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த மனுவில், எதிர்மனுதாரர்களாக (Respondents) பின்வருவோர் பெயரிடப்பட்டுள்ளனர்,பொலிஸ் மா அதிபர் (IGP),குற்றப் புலனாய்வுத் துறையின் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரி மாதவ குணவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!
Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்



