உள்ளூர்

வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லஞ்ச ஊழலில் சிக்கி அதிரடி கைது!

ness tamil

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் (OIC) இலஞ்ச குற்றச்சாட்டு ஒன்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த அதிரடி கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சில சீன நாட்டவர்களின் பாஸ்போர்ட்டுகள் வெலிக்கடை பொலிஸாரின் பொறுப்பில் இருந்துள்ளன. அவற்றை மீண்டும் அவர்களிடம் ஒப்படைப்பதற்காக, சந்தேகநபரான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சீனர்களிடம் ரூ. 3 இலட்சம் பணத்தை சட்டவிரோதமான முறையில் லஞ்சமாகக் கோரியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

இது குறித்துப் பெறப்பட்ட ரகசியத் தகவலின் அடிப்படையில் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசேட விசாரணைகளைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துக் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →
Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link