அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகக் கொள்கைகள் மற்றும் அதிகாரப் பிரயோகங்களுக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் “No Kings” (எங்களுக்கு மன்னர்கள் வேண்டாம்) என்ற பெயரில் பாரிய போராட்டங்கள் வெடித்துள்ளன.
வாஷிங்டன் டி.சி உட்பட நியூயோர்க், கலிபோர்னியா போன்ற முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மைக் காலமாக எடுத்து வரும் அதிரடி முடிவுகள், குறிப்பாக நீதித்துறை மற்றும் சர்வதேச விவகாரங்களில் அவர் கொண்டு வரும் மாற்றங்கள், அமெரிக்க அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட “மன்னராட்சி” முறையை ஒத்திருப்பதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
“அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடு, இங்கு சட்டம் அனைவருக்கும் சமம்” என்பதை வலியுறுத்தி போராட்டக்காரர்கள் பின்வரும் வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியிருந்தனர்:
- “No Kings in America” (அமெரிக்காவில் மன்னர்களுக்கு இடமில்லை)
- “Accountability for All” (அனைவருக்கும் பொறுப்புக்கூறல் அவசியம்)
- “Protect Our Democracy” (எங்கள் ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்)
நேற்று (30) இரவு வெள்ளை மாளிகைக்கு முன்பாகத் திரண்ட போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே சிறிய அளவிலான தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் மீதான போர் அச்சுறுத்தல் மற்றும் உள்நாட்டு வரிச் சீர்திருத்தங்கள் இந்தத் தீயை மேலும் தூண்டியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
எதிர்வரும் நாட்களில் இந்தப் போராட்டங்கள் மேலும் தீவிரமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.



