சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரிகள் குழு ஜூன் 24 இல் இலங்கை வருகை! பொருளாதாரச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய மதிப்பீடு!
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணியாளர்கள் குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு மிக விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 24 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் தங்கியிருந்து இந்த விசேட விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இலங்கையின் சமீபத்திய பொருளாதார வளர்ச்சியை விரிவாக மதிப்பீடு செய்யத் திட்டமிட்டுள்ளனர். அத்துடன், தற்போதைய பொருளாதாரச் சீர்திருத்த திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுடன் முக்கிய கலந்துரையாடல்களை முன்னெடுக்கவும் அவர்கள் எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிதி வசதிகளின் அடுத்தகட்ட மீளாய்வு நடவடிக்கைகளுக்கு இந்த விஜயம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.



