யாழ்ப்பாணம், உடுவில் புன்னாலைக்கட்டுவன் ஈவினை பகுதியில் விவசாயிகளின் நீர்ப்பாசனத் தேவைகளை மேம்படுத்தும் நோக்கில், விவசாய கிணறு புனரமைப்புப் பணிகள் “சமூக சக்தி” வேலைத்திட்டத்தின் கீழ் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மக்கள் மையப்படுத்தப்பட்ட அபிவிருத்தி நோக்கத்தின் அடிப்படையில், நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் கிராமிய மறுமலர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பணி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்த ஆரம்ப நிகழ்வில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் கலந்து கொண்டதுடன், தேசிய மக்கள் சக்தியின் தோழர்களின் ஒருங்கிணைப்பிலும், அப்பகுதி விவசாயப் பொதுமக்களின் நேரடி பங்களிப்புடனும் பணிகள் முறைப்படி தொடங்கிவைக்கப்பட்டன.
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s.
“ஆயிரம் கிராமங்கள் – ஆயிரம் வேலைகள்” வேலைத்திட்டம்:
- தேசிய நிதி ஒதுக்கீடு: நாடு முழுவதும் உள்ள கிராமப்புற உட்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசாங்கத்தினால் ரூ. 25,000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- பிரதான நோக்கம்: கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அடிமட்டத்திலிருந்து வலுப்படுத்துவதோடு, உள்ளூர் விவசாய உற்பத்தியை கணிசமான அளவில் அதிகரிப்பதே இதன் முக்கிய இலக்காகும்.
- செயற்படுத்தல் முறை: அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடன், தேசிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் நேரடி உழைப்புடன் இந்த அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s.

