உள்ளூர்

தலைப்பிறை தென்படவில்லை! இலங்கையில் மே 28ஆம் திகதி புனித ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்.

இஸ்லாமியர்களின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் எதிர்வரும் மே 28ஆம் திகதி வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஹிஜ்ரி 1447 ஆம் ஆண்டின் துல்கஃதா மாதத்தின் 29ஆம் தினமான இன்று (17), கொழும்பு பெரிய பள்ளிவாசலில் துல்ஹஜ் மாதத்திற்கான தலைப் பிறை தீர்மானிக்கும் மாநாடு நடைபெற்றது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

இன்றைய தினம் இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதாக நம்பகமான சான்றுகள் கிடைக்கப்பெறவில்லை. இதன் காரணமாக, நடப்பு துல்கஃதா மாதத்தை 30 நாட்களாகப் பூர்த்தி செய்து, நாளை மறுதினம் (மே 19) துல்ஹஜ் மாதத்தின் முதலாம் நாளாகக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

அதற்கமைய, துல்ஹஜ் பிறை 10 ஆம் நாளான எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினமாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

இன்றைய விசேட மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை (ACJU), முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்பு சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link