உள்ளூர்

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ அதிரடியாகக் கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (17) அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று புதன்கிழமை காலை, இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை அகாடமியில் (British Naval Academy) அவர் இணைந்தது மற்றும் அதனுடன் தொடர்புடைய நிதி விவகாரங்கள் குறித்த விசேட விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் வழங்க யோஷித ராஜபக்ஷ அழைக்கப்பட்டிருந்தார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்திருந்த உத்தியோகபூர்வ அறிவித்தலுக்கு அமைய அவர் இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

அதனைத் தொடர்ந்து, ஆணைக்குழுவின் விசேட விசாரணை அதிகாரிகளால் அவரிடம் நீண்டநேரம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நிலையிலேயே, போதிய சான்றுகளின் அடிப்படையில் அவர் இவ்வாறு அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கைது நடவடிக்கை அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர் விரைவில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →
Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link