முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (17) அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று புதன்கிழமை காலை, இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை அகாடமியில் (British Naval Academy) அவர் இணைந்தது மற்றும் அதனுடன் தொடர்புடைய நிதி விவகாரங்கள் குறித்த விசேட விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் வழங்க யோஷித ராஜபக்ஷ அழைக்கப்பட்டிருந்தார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்திருந்த உத்தியோகபூர்வ அறிவித்தலுக்கு அமைய அவர் இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, ஆணைக்குழுவின் விசேட விசாரணை அதிகாரிகளால் அவரிடம் நீண்டநேரம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நிலையிலேயே, போதிய சான்றுகளின் அடிப்படையில் அவர் இவ்வாறு அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கைது நடவடிக்கை அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர் விரைவில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.



