“நான் பேசாமல் இருந்தால் கேலி செய்வார்கள், பேசினாலோ பிராப்ளம்!” – மேடையில் ஓப்பனாகப் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த், தான் பேசும் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் குறித்து பொதுமேடை ஒன்றில் மிகவும் எதார்த்தமாகவும் சுவாரசியமாகவும் பேசியுள்ளார்.
சமீபத்திய நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், “நான் பேசாமல் சும்மா இருந்தால் கேலி செய்வார்கள். ஆனால், நான் எதாவது பேசினாலோ அது ‘Problem’ (பிரச்சனை) ஆகிவிடுகிறது” என்று தனது ஆதங்கத்தை நகைச்சுவையுடன் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், மனிதர்களின் இயல்பு குறித்து தத்துவ பாணியில் விளக்கிய அவர், “நம்மைப் பிடிக்காதவர்களுக்கு நாம் என்ன நல்லது செய்தாலும், எது செய்தாலும் பிடிக்காது. அதே நேரத்தில், நம்மைப் பிடித்தவர்களுக்கு நாம் பேசுவதெல்லாம் பிடிக்கும் என நினைப்பதும் தவறானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்தின் இந்த எதார்த்தமான பேச்சு தற்போது அவரது ரசிகர்கள் மத்தியிலும், சமூக வலைத்தளங்களிலும் மிக வேகமாகப் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது.



