புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புத்தளம் வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட வறிய குடும்பம் ஒன்றிற்கு நிரந்தர வீடொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (06.06.2026) சனிக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ M.J.M. பைசல் அவர்களின் தலைமையில் இந்த அடிக்கல் நாட்டு விழா முன்னெடுக்கப்பட்டது.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் (NHDA) அரசாங்க நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் இந்த வீடமைப்புத் திட்டமானது, மாவட்டத்தில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட வறிய குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும் அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது
இந்த வீட்டுத்திட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட வறிய குடும்பங்களுக்குப் புதிய வீடுகள் உத்தியோகபூர்வமாக வழங்கப்படவுள்ளதால், அவர்களின் நீண்டகால சொந்த வீட்டுக்கனவை நனவாக்குவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு இம்முறை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..




