உள்ளூர்

இலங்கைப் பொலிஸின் அதிரடி டிஜிட்டல் புரட்சி

மக்களின் விரல் நுனியில் பொலிஸ் சேவைகள்: புதிய மொபைல் செயலி மற்றும் இணையதளத்தை அறிமுகப்படுத்துகிறது இலங்கைப் பொலிஸ்!

நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கைப் பொலிஸ் துறையின் பல்வேறு அத்தியாவசிய சேவைகளை பொதுமக்களின் விரல் நுனியில் கொண்டுவரும் நோக்கில், புதிய மொபைல் செயலி (Mobile App) மற்றும் நவீனமயமாக்கப்பட்ட இணையதளம் என்பன விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. தற்போதைய பொலிஸ்மா அதிபர் (IGP) சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களின் நேரடி ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இந்த விசேட டிஜிட்டல் திட்டம் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

இத் திட்டம் முழுமையாக நிறைவடைந்த பின்னர், IOS மற்றும் Android ஆகிய இரு முக்கிய இயங்குதளங்களுக்கும் (OS) பொருந்தக்கூடிய ஒரு நவீன மொபைல் செயலி மற்றும் புதிய பொலிஸ் இணையதளம் என்பன பொதுமக்களின் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளன.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

இம் மொபைல் செயலியின் முக்கிய சிறப்பம்சங்கள்:

  • அவசர அறிவிப்புகள் (Notification): பொலிஸ் ஊடகப் பிரிவினால் சமூக ஊடகங்கள் வழியாக வெளியிடப்படும் விழிப்புணர்வு தகவல்கள், செய்திகள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எளிதாகப் பார்வையிட முடியும். அத்துடன் அவசர அறிவிப்புகள் ‘Notification’ வசதி மூலம் உடனுக்குடன் மக்களைச் சென்றடையும்.
  • பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் (Police Clearance Certificate): பொதுமக்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் ஏனைய தேவைகளுக்காகப் பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ்களைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை இந்த செயலி மூலமாகவே எளிதாகச் சமர்ப்பிக்க முடியும்.
  • அவசர சேவைகள்: அவசர தொலைபேசி எண்கள் மற்றும் ஆபத்தான கட்டங்களில் உதவக்கூடிய அவசரகால ‘Location Alert’ போன்ற பாதுகாப்புச் சேவைகளும் இதில் உள்ளடக்கப்படவுள்ளன.

இப்புதிய செயலி மற்றும் இணையதளமானது, “Vampior Design” என்ற பிரபல மென்பொருள் அபிவிருத்தி நிறுவனத்தினால் (Software Development Company) வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான தொழில்நுட்ப ஆதரவு மற்றும் நிர்வாகப் பணிகளை இலங்கைப் பொலிஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவும், உள்ளடக்கத் தயாரிப்புப் பணிகளை (Content Creation) பொலிஸ் ஊடகப் பிரிவும் மேற்கொண்டு வருகின்றன.

இத் திட்டத்தின் தற்போதைய முன்னேற்ற நிலைமைகளை மதிப்பாய்வு செய்யும் விசேட கூட்டம் கடந்த 2026.06.16 அன்று கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ்மா அதிபரின் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் அலுவலக தத்துவ பிரதானி பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் டயஸ், ஆராய்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஷானி செனவிரத்ன, பொலிஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவு பணிப்பாளர் சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர் கே.ஜீ. லக்சிறி கீதால், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ. வுட்லர் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளும், “Vampior Design” நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அசங்க பண்டார உள்ளிட்ட நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link