அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்குச் சவால்! உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு அனுமதி!
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்குத் தகுதியற்றவர் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நிர்வாகச் செயலாளர் ரேணுக பெரேராவினால் இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த மனுவை விரிவாகப் பரிசீலித்த பின்னரே, உயர் நீதிமன்றம் அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக ‘அத தெரண’ நீதிமன்றச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்
Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

