உள்ளூர்

செம்மணியில் மேலும் 6 என்புக்கூடுகள் மீட்பு!

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் பெரும் திருப்பம்! சிறியவர் உட்பட மேலும் 6 என்புக்கூடுகள் மீட்பு! மொத்த எண்ணிக்கை 437 ஆக உயர்வு!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று (18) வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, சிறியவர் ஒருவரின் என்புக்கூடு உட்பட மேலும் 6 மனித என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையிலேயே, 36ஆவது நாளான இன்றைய தினம் (18) இந்த அதிரடித் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

இன்றைய அகழ்வாராய்ச்சியின் போது புதிதாக ஒரு பெரியவரின் என்புக்கூட்டுடன், சிறியவர் ஒருவரின் என்புக்கூடும் உள்ளடங்கலாக மொத்தம் 6 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளுள் 5 என்புக்கூடுகள் இன்று முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அகழ்வுப் பணியின் போது மனித எச்சங்கள் மட்டுமன்றி, வெள்ளை நிறத்திலான பாசிமணிகள், இரும்புத்துண்டுகள் மற்றும் வளையல் என்பன பிற சான்றுப் பொருட்களாக நீதிமன்றப் பாதுகாப்பின் கீழ் மீட்கப்பட்டுள்ளன.

வித்தியாசமான மண்டையோடு மர்மம்: அத்துடன் மூன்று மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஒரு மண்டையோடு மிகவும் வித்தியாசமான முறையில் கண்டறியப்பட்டுள்ளது. அதனைச் சுத்தம் செய்யும் பணிகள் தற்போது மருத்துவ மற்றும் தொல்பொருள் நிபுணர்களால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில், செம்மணிப் புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் என இதுவரையில் ஒட்டுமொத்தமாக 90 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 437 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றுள் 428 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link