இலங்கையில் 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளதாக கல்விப் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீரவினால் வாய்மூல விடைக்கான எதிர்பார்ப்புடன் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இந்த அதிரடிப் புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ தரவுகள்:
பிரதி அமைச்சர் நலின் ஹேவகே சமர்ப்பித்த அறிக்கையின்படி, கடந்த இரு வருடங்களில் பாடசாலை செல்லாத பிள்ளைகள் மற்றும் இடைவிலகியவர்களின் விபரங்கள் பின்வருமாறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது:
| விபரம் | 2024 ஆம் ஆண்டு | 2025 ஆம் ஆண்டு |
| அடையாளம் காணப்பட்ட பாடசாலை செல்லா பிள்ளைகள் | 711 | 885 |
| மீள பாடசாலையில் சேர்க்கப்பட்ட பிள்ளைகள் | 570 (மாணவிகள்: 280, மாணவர்கள்: 290) | 777 (மாணவிகள்: 384, மாணவர்கள்: 393) |
| கல்வி வாய்ப்புகளுக்கு வழிநடத்தப்படாதவர்கள் | 28 (மாணவிகள்: 10, மாணவர்கள்: 18) | 34 (மாணவிகள்: 11, மாணவர்கள்: 23) |
| பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்கள் | 597 | 301 |
| மீண்டும் பாடசாலையில் சேர்க்கப்பட்டவர்கள் | 309 | 210 |
| இதுவரை பாடசாலையில் சேர்க்கப்படாத பிள்ளைகள் | 47 | 91 |
நாடாளுமன்றத்தில் மேலும் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், அடையாளம் காணப்பட்ட பிள்ளைகளில் கணிசமானோர் பல்வேறு காரணங்களால் கல்வி வாய்ப்புகளுக்கு வழிநடத்தப்படாமல் உள்ளமையை ஒப்புக் கொண்டார். எனினும், இடைவிலகிய மற்றும் பாடசாலை செல்லாத பிள்ளைகளை மீண்டும் கல்வி முறைமைக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.




