உலகம்

கனடாவில் அதிர்ச்சி! டொராண்டோ அமெரிக்க தூதரகம் அருகே மீண்டும் துப்பாக்கிச் சூடு

கனடா டொராண்டோவில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே துப்பாக்கிச் சூடு! 4 மாதங்களில் நடந்த 2ஆவது சம்பவம்!

கனடாவின் மிகப்பெரிய நகரமான டொராண்டோவில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகக் கட்டடத்திற்கு அருகே மீண்டும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றபோதிலும், தூதரகக் கட்டடத்தின் முன்பகுதி சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

: கடந்த நான்கு மாத காலத்தில் இவ்வாறானதொரு சம்பவம் பதிவான இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னர் கடந்த மார்ச் மாதம் 10 ஆம் திகதியும் இந்தக் கட்டிடத்தை இலக்கு வைத்துப் பல துப்பாக்கிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

டொராண்டோ பகுதியில் உள்ள யூத தொழுகைக்கூடங்களை (Synagogues) இலக்கு வைத்து நடத்தப்பட்ட மூன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தொடர்ந்தே இச்சம்பவமும் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக, டொராண்டோவில் அமைந்துள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தூதரகங்களின் முன்பாகப் பாதுகாப்பைப் பலப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

டொராண்டோ பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் பணம் கொடுத்து, யூத தொழுகைக்கூடங்கள், யூத பாடசாலைகள் மற்றும் அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தூண்டப்பட்டுள்ளமை தொடர்பில் கனடா பொலிஸார் விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்யப் பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்த வேளையில், அந்த நடவடிக்கையின் போது பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

உலகம்

நாளை முதலமைச்சராக விஜய் பதவியேற்பு!

தமிழக சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் (TVK), தனது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க ஆளுநரின் அனுமதியைப் பெற்றுள்ளது. இன்று மாலை
உலகம் உள்ளூர்

தமிழக முதல்வர் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார வாழ்த்து!

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ
Share via
Copy link