உலகச் செய்திகள்

தென் கொரிய முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நீதிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டுக்களுக்காக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சியோல் நீதிமன்றம் இன்று (16) தீர்ப்பளித்துள்ளது.

இராணுவச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன்னர் அமைச்சரவையுடன் கலந்தாலோசிக்கத் தவறியது மற்றும் தனது கைதை மறைக்க ஆவணங்களைத் திருத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் இத்தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.

யூன் சுக் இயோல் மீது சுமத்தப்பட்டுள்ள எட்டு வழக்குகளில் மிக முக்கியமானது ‘அரச துரோகம் மற்றும் கிளர்ச்சி’ தொடர்பான வழக்காகும்.

இவ்வழக்கிற்கு அரச தரப்பு மரண தண்டனை கோரியுள்ள நிலையில், அதன் இறுதித் தீர்ப்பு பெப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.

தென் கொரிய அரசியலில் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ள இந்தத் தீர்ப்பு, அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகச் செய்திகள்

ரஷ்யாவுடன் வர்த்தகம் தொடர்ந்தால் இந்தியாவுக்கு கூடுதல் வரிகள்: டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது மற்றும் அமெரிக்காவின் வரி கொள்கைகள் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடன் இந்தியா தொடர்ந்து வர்த்தக
உலகச் செய்திகள்

மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க ஐநா கோரிக்கை

காசா பகுதியில் தொடரும் மோதல்களால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மனிதாபிமான உதவிகளை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை உலக நாடுகளுக்கு கோரிக்கை