கொழும்பு – பதுளை பிரதான வீதியின் ஹல்துமுல்ல, கலுபஹான பகுதியில் இன்று காலை தனியார் பேருந்து ஒன்று பாரிய விபத்துக்குள்ளானது. மலைப்பாதை வளைவில் பேருந்து நிலைதடுமாறி கவிழ்ந்ததில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காயமடைந்த பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டு தியத்தலாவ மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அப்பகுதியில் கடும் பனிமூட்டம் அல்லது கவனக்குறைவு காரணமாக விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து ஹல்துமுல்ல பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

